Posts

Showing posts from 2015

மனநலம்

உங்களுக்கு கற்றுத்தந்த ஆசிரியரை எப்போதாவது மனநலம் தவறியவராக பார்த்திருக்கிறீர்களா? அதற்கான சாத்தியங்களுடன் தான் இந்த சமூகம் இருக்கிறது          -  ---வண்ணதாசன். பேருந்தில் உடன் பயணித்த அந்த நடுத்தர வயதுக்காரர் தான் இப்போது அடைக்கலமாகியிருப்பது இமையமலையில் என்றார்.”அங்கு சென்று எழுபது வருடங்கள் ஆகிறது என்றும் இப்போது தனக்கு ஐம்பத்தெட்டு வயதாகிறதும் என்றார். புத்தி பேதலிக்காமல், உடுப்பை கிழித்துக்கொள்ளாமல் தினம் தினம் ஷவரம் செய்து புது உடுப்பு போட்டுக்கொண்டும் எழுதப்படிக்க தெரிந்தும் இந்த பேருந்து இந்த இடத்திற்கு செல்கிறது, எந்த நிறுத்தத்தின் பின் தான் இறங்கவேண்டும் எனும் குறைந்த பட்ச பிரக்ஞையுடன் ஆனால் எப்போதோ அல்லது ஏதோ ஒரு காலத்தில் தன் மனதை மனதின் செயல்பாடுகளை உறைய வைத்திருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது.. இந்த நிலையிலிருந்து அவர் மீளவிரும்பவில்லையா அல்லது எப்படிப்பிழைத்தாலும் அந்த வயதிற்குப்பின் இந்த வாழ்க்கை இப்படித்தான் இருக்கப்போகிறது எனும் முன் அனுமானத்துடன் இருக்கிறாரா எந்த்தெரியவில்லை.அடுத்த விநாடி பற்றிய நிகழ்வில் அல்லது பொருப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாத விட்டேத்தி

SURVIVAL OF THE FITTEST

இப்போதெல்லாம் சுமாரான உணவகங்களில் கூட சாப்பிட்டு முடித்ததும் புத்தகம் போன்ற அட்டைகளில்தான் சாப்பிட்ட ரசீது வைக்கிறார்கள். அனேக சிப்பந்திகளும் மேலைய நாட்டினர் போல் ஒரே நிற உடுப்பணிந்து பவ்யமாக தமிழக அமைச்சர்கள் போல் நின்றுகொண்டுதான் கட்டளை கோருகிறார்கள். எனக்குத்தெரிந்த உள்ளூர் உணவகம் ஒன்றில் பலவருடம் பரிமாறுபவராக சிவராஜ் என்பவர் இருக்கிறார். அறுபதைக்கடந்த அவர் இதற்குமுன் இருந்த உணவகத்தை இழுத்து மூடிவிட்டதால் இப்போது இங்கிருக்கிறார். எப்போதும் சிரித்த முகத்துடன் ஊக்கத்தொகை தருகிறவர் தராதவர் என எந்த பேதமும் இன்றிவாடிக்கையாளர்களை எதிர்கொள்கிறவர். ரசீதை தருவதே சூடம் காட்டும்போது இடது கைவிரல்கள் வலது கணுக்கை அருகேபடும்படி இருக்குமே அப்படி பக்தியுடன் தருவார். சிலர் ஊக்கத்தொகை கொடுக்கும்போதும் அப்படியேதான் பெற்றுக்கொள்வார். என் சிறு வயதிலிருந்தே அவரை அப்படித்தான் பார்த்துவருகிறேன். மீசை அரும்பாத வயதிலேயே அவருக்கு ஒரு முதலாளி தோரணையில் காசு கொடுத்திருக்கிறேன். ஒரு முறை அப்பாவுடன் போகும்போது சாப்பிட்டு முடித்ததும் அவருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்து நீண்டநேரம் கழித்து அவருக்க

பூர்வ ஜென்ம...

நண்பரின் சர்விஸ் சென்டரின் முன்நின்று பேசிக்கொண்டிருந்தபோது நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மா என்னை அருகில்வந்து சன்னமான குரலில் அழைத்தார். "தம்பி நீங்க ரத்தினம் அக்கா பையன் தானே, என்னை உங்களுக்கு தெரியாது ஆனா, உங்களை எனக்குதெரியும்..ஒரு உதவி." என்று ஆரம்பித்தார். "சொல்லுங்க என்ன பண்ணனும்" "பக்கத்துலதான் வீடு ஒரு எட்டு வந்தா கொஞ்சம் உபயோகமா இருக்கும்" "என்ன விஷயம் சொல்லுங்க வாரேன்" "என்ககூடப்போறந்தவங்க பசங்க யாரும் இல்லை.மூனும் பொண்ணுங்க, கொஞ்சநேரம் முன்னாடி எங்கப்பா இறந்த ுட்டார் என்ன பண்றதுன்னு தெரியலை குளிப்பாட்டி சேர்ல வைக்கணும், சொந்தங்களுக்கு சொல்லிவிட்ருக்கு, அவங்க வாறதுக்கு மதியம் ஆயிடும் அதுவரைக்கும் அப்படியே வச்சிருக்க முடியாது அதான் கொஞ்சம் உதவி பண்ணீங்கன்னா..." என்றார் துளி சலனமின்றி. எனக்கு தூக்கிவாரிப்போட்டது. ஒரு பிரேதத்தை குளிப்பாட்ட வேண்டுமா தனியாளாக! கைகால் உதற ஆரம்பித்தது. என்னை வேறு தெரியும் என்று சொல்லிவிட்டார்.அம்மாவின் பெயரை சொல்கிறார். ஒருவேளை அமாவுக்கு தெரிந்தவராக இருக்குமோ என் யோசித்தவாறே சென்றேன். ஒரு அகண்ட

பாட்டி

எண்பத்தெட்டு வயது வரை உயிரோடிருந்த சீனிமுத்து பாட்டி அதுவரை தன் உயிரை கெட்டியாய் பிடித்திருந்தது வாழ்க்கையின் மீதிருந்த பற்றினால் அல்ல.தனக்கொரு பிள்ளையைக்கொடுத்துவிட்டு இளம் வயதிலேயே உயிரை விட்ட கணவனுக்காகவும் இல்லை. பிறந்த குழந்தை மனவளர்ச்சி குன்றியது தெரிய ஐந்து வருடம் ஆன நிலையில் அதற்குப்பின் ஒவ்வொருநாளும் அந்தக்குழந்தையின் உயிர்ப்பிக்கே செலவிட்டாள். கூலிவேலை செய்தாள், சித்தாள் வேலையும் செய்தாள்.சித்தாள்களை பற்றிய தவறான கட்டுகதைகள் பரவ, கொஞ்ச காலம் விறகு சுமந்தாள். சொற்ப வ ருமானத்தில் அவன் மானம் காக்க துணிகள் தைத்தாள். வளர்ந்தான் அவன். பள்ளியிலும் சேர்க்கமுடியவில்லை. சக சிறுவர்களும் சேர்ப்பாரில்லை. அவள் முதுமையை கைப்பிடித்தபோது அவனை அரம் அடிக்கும் கொல்லனிடம் துருத்தி ஊத அனுப்பினாள். அன்றாடம் ஐந்துரூபாய் சம்பளம். அதில் கழிந்தது சில காலம். எவராயிருந்தாலும் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் அப்படி ஒரு வயிற்றுவலி.அப்படியும் பொறுமையுடன் பொங்கிப்போட்டாள். மகனுக்கு திருட்டுப்பழக்கம் உள்ளதென அக்கம் பக்கம் பேசுகையில் மௌனம் மட்டுமே காத்தாள். சாராயக்கடையில் ஒருவனுடன் பார்த்ததாக சொன்னபோதும் காதில்

பருவமே புதிய சேட்டை பண்ணு...

பலசரக்கு கடையில் பொட்டலம் மடிக்க என்று குமுதம், விகடன், வாரமலர், நாளிதழ்கள் என்று சைஸ் வாரியாக கிலோகணக்கில் வாங்குவோம். அதில் அதிர்ஷ்ட வசமாக "பருவகாலம்" புத்தகங்களும் ஒளிந்திருக்கும். அப்பா சந்தைக்குப்போகும் சமயம் ஏதேச்சையாக தென்படும் அப்புத்தகங்களை நானும் அண்ணனும் தனித்தனியே நைசாக லவட்டிவிடுவோம். நான் அதை படிக்க ஏதுவான இடமாக உறவுக்கார பையனின் அறையை தேர்வு செய்தேன். அது ஒரு சாணம் மொழுகிய குடிசை. அவன் படிப்பதற்கென்றே ஒதுக்கப்பட்டது. பெரும்பாலும் அமைதியின் திருவுருமாய் இருப்பா ன். ஊரில் அவனுக்கு அடக்கமான பையன் என்ற பேர். பாடப்புத்தகங்களுக்கு நடுவில் "அந்த" புத்தகங்களை சொருகி எடுத்துக்கொண்டு அம்மாவிடம் செல்வன் வீட்டில் படிக்கப்போகிறேன் என்று சொல்லி அவன் அறைக்கு வந்து படிப்பேன். அரைநிர்வாண படங்களும், மாமியின் கதைகளும் காம ஹார்மோன்களை அதிகம் சுரக்கச்செயது, முகப்பருக்களை அதிகமாக்கியது. செல்வனுக்கு அதைப்படிப்பதில் பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. பாடமெல்லாம் படித்துமுடித்தது போக, கடைசியில் இரண்டு பக்கங்களை புரட்டினாலே அவனுக்கு வயிற்றை புரட்டும். எச்சில் உலர்ந்துவிடும். ஓரே அற

ஏய் நில்லு லைசென்ஸ் இருக்கா?

இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் எவரேனும் ட்ராபிக் போலீசிடம் பிடிபடாமல் வந்திருக்கிறோமா? மூன்று வண்டியில் நான்கு மிலிட்டரி ஃபுல் பாட்டில்களுடன் ஐந்து நண்பர்கள் கொடைக்கானல் கிளம்பினோம். வழிநெடுக ஒவ்வொரு வளைவிலும் தாகம் தீர்த்துக்கொண்டோம். மூஞ்சிக்கல் நெருங்கும் முன்பே இரண்டு பாட்டில் காலி. இரவு ஏழுமணிவரை லேக். பின் நான்கு மணிநேர இடைவெளியில் தெளியவிருந்த போதையை மற்றுமொரு பாட்டில் துணைகொண்டு தடுத்தோம். அறையில் சிதறிக்கிடந்த சிப்ஸ் துகள்களுக்கு நடுவே படுத்துறங்கினோம். சாதாரண போ ர்வையே போதுமானதாய் இருந்தது. மீதிக்குளிருக்கு உள்ளிருந்த திரவம் உபகாரமாய் இருந்தது. ஒருவனுக்கு ஆறு மணிக்கு முழிப்பு வந்தவுடன் பதட்டமாய் எல்லோரையும் எழுப்பினான். அரைத்தூக்கத்தில் அலங்கோலமாய் எழுந்து விசாரித்தோம். "விடிஞ்சிடுச்சுடா" என்றான் அதிகாலையை ஆர்வமாய் ரசித்தபடி. "அதுக்கு?" "டேய் இப்பவே ஸ்டார்ட் பண்ணுவோம்" என கட்டிலுக்கடியில் கிடந்த ஒருபாட்டிலை எடுத்தான் முதலிரவுக்கு மூர்க்கமாக தயாராகும் ஒரு புதுமாப்பிள்ளை போல. "டேய்...உன் வாழ்க்கையில சரக்கை பாத்ததே இல்லியா?" என்று கேட்

வாழ்வரசியின் கணவன்!

இசைத்தட்டுக்களே வாழ்க்கை என கிடந்தவன் குமரேசன் ஒலிநாடாக்களில் விரும்பும் பாடல்களை நிரப்பித்தருவதுதான் அவன் தொழில். வெளிநாட்டு மியுசிக்சிஸ்டம், விதம்விதமான ஒலிபெருக்கி பெட்டிகள் வைத்து ரசனையாக ராஜா பாடல்களை ஒலிக்க விட்டு TDK, T-Series,SONY, காசெட்டுகளில் அதை நிரப்பும் வித்தை அலாதியானது. காதல்வயப்பட்ட இளைஞர்களின் புகலிடம் அதுதான். பாஸ், ட்ரபிள், வாய்ஸ் என தரம்பிரித்து, அவரவர் ரசனைக்கேற்ப பாடல்களை நிரப்பும் அவன், பாடல்களிலேயே எங்கள் மனதிலும் நிரம்பியிருந்தான். காதலியோ, நண்பனோ  இந்த பாடல் எந்த படம், இந்தப்படத்தில் எந்த பாட்டு எனும் கேள்விகளுக்கு விடை விரல்நுனியில் இருக்கும். இப்படி பாடல்களை மட்டுமே கட்டிக்கொண்டு உருகியவனை அவன் மனைவிக்கு பிடிக்காமல் ஏன் போனது என எங்களுக்கு தெரியாது. இந்த தொழிலில் வரும் சொற்ப வருமானம் பிடிக்காமல் அவனுடன் எப்போதும் போர் செய்தபடி இருப்பாள். அரண்மனைக்கிளி படத்தில் “வீணைக்கு வீணைக்குஞ்சு” பாடலை ராஜாவுடன் இணைந்து உருகி ஒலிப்பேழையில் ரெகார்ட் செய்த சமயம் அவன் மனைவி கிணற்றில் விழுந்து செத்துப்போனதாக தகவல் வந்தது. ஒரு கைக்குழந்தையை வீட்டில் விட்டு எப்ப

ஓட ஓட தூரம் கொறையல..

கர்நாடகாவில் துணி வியாபாரத்திற்கு போய் வந்த நண்பன் சிவா வரும்போது "கர்நாடகா பாட்டில்" இரண்டு வாங்கிவந்தான். அதுவரை ஊள்ளூர் சரக்குகளை மட்டுமே ருசித்த நண்பர்கள் இந்த "திறப்புவிழாவுக்கு" பாண்டிசேரி தமிழ்நாடு என்று இரண்டு இடங்களில் புழங்கிய சீனியாரிட்டி அடிப்படையில் என்னை தேர்ந்தெடுத்தார்கள். மூணாறு மலைச்சாலையில் ஆரம்பித்தோம். நான்கு நண்பர்கள் இரண்டு பாட்டில்கள். ருசியை சிலாகித்தவாறே பருகினோம். "என்ன இருந்தாலும் கர்நாடகா கர்நாடகா தான், மச்சி அன்னிக்கி பாண்டியிலிருந்து ஒரு ஸ்காட ்ச் வாங்கிவந்தியே அது கூட இந்த டேஸ்ட் இல்ல மச்சி. சூப்பர் சிவா" என்றார்கள். நான் வாங்கிவந்தபோதும் இதே டயலாக் தான் சொன்னார்கள் இந்த உயிர் நண்பர்கள். எல்லாம் முடிந்து காலி பாட்டில்களை பாதுகாப்பாக உருட்டிவிட்டு கிளம்பும்போது மணி எட்டு. கீழிறங்கி போடிக்கு வந்து சிவா ஒரு நண்பனை இறக்கிவிட சில்லமரத்துப்பட்டி சென்று விட்டான். நானும் இன்னொரு சில்லமரத்துப்பட்டி நண்பனும் ஒரு வண்டியில் கிளம்பினோம். நல்ல போதை இருந்தது. வீட்டில் கண்டுபிடிக்காமல் இருக்க ஆளுக்கு ஒரு பாஸ்பாஸ் வாங்கிக்கொண்டு இடையில் ஒரு

எது நடந்ததோ அது...

பாப்புசாமி ஐயா தான் எங்கள் ஊரில் முதன்முதலில் பெரிய அளவில் பலசரக்கு கடை வைத்தார். அதுவரை ஒன்றிரண்டு பெட்டிக்கடை மட்டுமே இருந்தது. சுற்றுப்பட்டு கிராமங்களில் உள்ள சின்ன சின்ன தேநீர்க்கடைக்காரர்கள், தையல்காரர்கள், பணியாரம் சுட்டு விற்கும் ஆச்சிகள், மற்றும் அன்றாடங்காச்சிகள் என அந்த கடையின் வாடிக்கையாளர்கள் மிகுந்திருந்தனர். விற்பனை மட்டுமல்ல, விவசாயிகளின் பருத்தி, ஆமணக்கு விதைகள், சிறுவர்கள் பொறுக்கிவரும் வேப்பங்கொட்டைகள், பழைய நோட்டு புத்தகங்கள் என வாங்கவும் செய்வார். அமோகமான  வியாபாரத்திற்கு உதவிக்கு ஐ.டி.ஐ முடித்து ஊர்திரும்பிய தன் மூத்த மகன் ராஜாவையே உதவிக்கு வைத்துக்கொண்டார். அதற்குப்பின் ராஜாதான் அங்கு ராஜா! சிரித்த முகத்துடன் யாரையும் கடுப்பேற்றாமல் மென்மையாக வியாபாரம் பார்க்கும் அவன் உத்தியை ஊரே ரசித்தது. அவனுக்கு செல்லப் பெயர்கள் வைத்தார்கள். நாளடைவில் மொத்த விற்பனை கடை போலானது. பாப்புசாமி கொள்முதல் செய்வதை மட்டும் பார்த்துக்கொண்டார். சாயங்கால வேளைகளில் கூட்டம் கண்ணைக்கட்டும். ஒற்றை ஆளாக சமாளிப்பான் ராஜா. கூலி வேலைக்கு சென்று திரும்புபவர்கள் கூலிப் பணத்தை அங்குதான் உடைப்பார்கள்

நிழற்படம்

முப்பத்தாறு நிழற்படங்கள் பதியக்கூடிய ஃபில்ம் சுருளை உங்கள் கேமராவில் லாவகமாக பொருத்தி, பின்மூடியை அழுத்தி மூடி புகைப்படம் எடுப்பதற்கு தயாராகிறீர்கள்.அதன் லென்ஸுக்கு அப்பால் உங்களுக்கு முன் காட்சிகள் விரியத்தொடங்குகின்றன. அக்காட்சிகளை உங்கள் கைக்கேமராவுக்குள் அடக்க உங்கள் ஆர்வம் பீறிடுகிறது. சுற்றியுள்ள அனைவரும் உங்களை பெரும் புகைப்படக்கலைஞனாக மதித்து அவர்களின் நிழலைத்தர முன் வருகிறார்கள். இப்போது அதன் ஷட்டர் மூடியை கழட்டி உங்கள் கண்களுக்கு மிக அருகில் அதன் குவிக்கண்னாடியை பதிக்கிறீர்கள் முதலில் மங்கலாக பின் அதன் குவிலென்ஸை திருகத்திருக காட்சிகள் ஸ்தூலமாக விரிகின்றன். ஃபில்ம் சுருள் சுழல்வதற்கு முந்தைய கட்டத்தில் உங்கள் ஷட்டர் விலக்கப்பட்டு,அதனுள் நீங்கள் பொதித்த பலம் பொருந்திய மின்கலங்கள் கொடுத்த சக்தியில் அவ்வறையெங்கும் மைக்ரோ செகண்ட் பரவிய வெளிச்சத்தில் எதிரில் இருக்கும் பிம்பம் அதன் பசை தடவிய நாடவில் பதிகிறது, புகைப்படம் 1 என பதிந்த அந்த காட்சி உங்களுக்கு நினைவிருக்கிறதுதானே? சுருட்டிவிக்கப்பட்ட அதன் குடுவயிலிருந்து இன்ச் இன்ச்சாக நீளம் வெளிவர வெளிவர இப்போது உங்கள் நினைவுகள் பின